புதுச்சேரி: பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைவதால் வழக்கம் போல் சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
