வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் – டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி:
டெல்லியின் வடகிழக்கே பழைய சீமாபுரி பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதுபற்றி தேசிய பாதுகாப்புப் படைக்கு தெரிவித்தனர்
இதையடுத்து, போலீசார் சம்பவ இடம் சென்று சோதனையிட்டனர். அதில், 3 கிலோ எடை கொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று இருந்தது. இந்த வெடிகுண்டில் அம்மோனியம் நைட்ரேட், ஆர்.டி.எக்ஸ் மற்றும் டைமர் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது.
இதன்பின் தேசிய பாதுகாப்புப் படையினர் அந்த வெடிகுண்டை வேறு இடத்திற்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்தனர்.
இதில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபர்கள் டெல்லி-உத்தர பிரதேச எல்லையருகே பதுங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.