முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு? பஞ்சாப் முதலமைச்சர் சன்னி விடுத்த கோரிக்கை பரிசீலிப்பதாக அமித்ஷா உறுதி <!– முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு? … –>

டெல்லிமுதலமைச்சர் கெஜ்ரிவால் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி சொன்னதை பரிசிலீப்பதாக மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கெஜ்ரிவால் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.இது தொடர்பாக சரஞ்சித் சிங் அமித்ஷாவுக்கு விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை தாம் தனிப்பட்டமுறையில் கவனிப்பதாக அமித் ஷா உறுதியளித்துள்ளார். ஒரு மாநில அரசின் முதலமைச்சருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என்பது தீவிரமான குற்றச்சாட்டு ஆகும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.