முத்து ரத்தினம் பள்ளியில் இன்று ரத்ததான முகாம்| Dinamalar

புதுச்சேரி, : முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இன்று ரத்ததான முகாம் நடக்கிறது.கவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில், 7 நாள் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.

மூன்றாம் நாளான இன்று காலை 9:00 மணி முதல், பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகின்றது.ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர், கொடையாளர்களிடம் இருந்து ரத்தம் தானம் பெறுகின்றனர்.ரத்த தானம் செய்வோர், 24ம் தேதி மாலை நடைபெறும் முகாம் நிறைவு விழாவில் கவுரவிக்கப்படுவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.