கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து!



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டள்ள மகாராணி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல வாழ்த்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரித்தானியா பிரதமர் ஜான்சனும் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.

மகாராணி கொரோனா நோயிலிருந்து விரைவாக குணமடையவும், துடிப்பான நல்ல ஆரோக்கியத்திற்கு விரைவாக திரும்பவும் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகிறேன் என்று ஜான்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.