சிறப்பு சேவை கட்டணங்களை உயர்த்திய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி

திருப்பதி கோவில் சிறப்புச் சேவைக் கட்டணங்களைத் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.  இவை ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டம் நடந்தது

இந்த கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.  ,இதன்படி வஸ்திர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.   மேலும் கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ.1000-இல் இருந்து ரூ.2,500-ஆக அதிகப்படுகிறது,

இதைப் போல் சுப்ரபாதம் தரிசன கட்டணம் ரூ.240-இல் இருந்து ரூ. 2ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது. தவிர தோமாலா சேவை மற்றும் அர்ச்சனைக் கட்டணத்தை ரூ.440 -இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.