சென்னை: தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை என அவர் தெரிவித்துள்ளார். நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
