ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார்!

ஆந்திர மாநில தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி, இன்று காலை மாரடைப்பால் காலமானார். மேகபதி கவுதம் ரெட்டிக்கு திடீரென நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திர அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி

துபாயில் இருந்து அவர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி முன்னாள் எம்.பி மேகபதி ராஜமோகன் ரெட்டியின் மகன் ஆவார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவர் என்றும் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.