தொடர்ந்து இறங்குமுகம் காட்டும் கொரோனா… பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு!

தேசிய அளவில் புதிதாக கொரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா மூன்றாவது அலை பொதுமக்களை வாட்டி வைத்து வந்த நிலையில், சில வாரங்களாக தேசிய அளவில் அதன் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் அன்றாட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ” கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16051 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையைவிட கிட்டதட்ட 4000 குறைவாகும்.

50 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தற்போதுதான் இந்த அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, கொரோனா தினசரி பாதிப்பு 16,764 ஆக இருந்தது.

இந்த நிலையில் 52 நாட்களுக்கு பிறகு இன்று அந்த எண்ணிக்கை 16,051 ஆக குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.93 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 206 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் தற்போது நாடு முழுவதும் மொத்தம் 2.02 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 175.46 கோடி டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.