இலங்கையுடனான டி20 தொடர் – சூர்யகுமார், தீபக் சாஹர் காயத்தால் விலகல்

புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி 3-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் முழுமையாக கைப்பற்றியது.
இதற்கிடையே, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார் எனப்து நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.