கொரோனா பாதித்த 363 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி : மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1062 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோ தனையில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1,65,619 ஆக உயர்ந்து, பாதிப்பு சதவீதம் 2.07 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் 19 பேரும், வீட்டு தனிமையில் 344 பேர் என மொத்தம் 4363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,63,296 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1960 ஆகவும், இறப்பு சதவீதம் 1.18 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 234 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது வரை 9,28,512 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.