கோரிக்கை அட்டை அணிந்து கல்லுாரி ஆசிரியர்கள் போராட்டம்| Dinamalar

புதுச்சேரி : கல்லுாரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி உயர்கல்வி குழுமத்தின் கீழ், ஒரு கல்வியியல் கல்லுாரி, நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இயங்கி வருகின்றன. இக்கல்லுாரி ஆசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.இதனை கண்டித்து, கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு நடத்தினர்.

இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை.இரண்டாம் கட்டமாக, நேற்று காலை 9.00 மணிக்கு அனைத்து கல்லுாரிகளிலும் வாயிற் கூட்டத்திற்காக திரண்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணித்து பாடம் நடத்தினர்.

இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லுாரி முன் நடந்த வாயிற்கூட்டத்திற்கு, உயர்கல்விக் குழும ஆசிரி யர் சங்க தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.அடுத்தகட்டமாக, வரும் 24ம் தேதி மாலை 5.௦௦ மணிக்கு உயர் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.