ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

ஜம்மு: ராஜ்வார் பகுதியில் பதுங்கியிருந்த  ஜெய்ஷ் – இ -முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.  ஜம்மு – காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ராஜ்வார் பகுதியில் தப்பியோட முயன்ற தீவிரவாதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அந்த தீவிரவாதியை கைது செய்தனர். விசாரணையில், அவன் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த உபைத் பஷீர் வானி என்பதும், ஜெய்ஷ் – இ -முகமது இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.