வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு 'விமலகீர்த்தி ஸ்ரீ விஜித' என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவி வழங்கல்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம சங்க சபையினால் வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி கௌரவ மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு ‘விமலகீர்த்தி ஸ்ரீ விஜித’ என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவிக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் 19.02.2022 அன்று பிற்பகல் கலந்து கொண்டார்.

கோட்டே ரஜமஹா விகாரையில் அமைந்துள்ள கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி அக்கமஹா பண்டித வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரரினால் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவிக்கான சன்னஸ் பத்திரம் வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி கௌரவ மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு வழங்கப்பட்டது.

தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவி வழங்கப்பட்ட வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி கௌரவ மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு அஷ்ட பரிஷ்காரம் நிவேதனம் செய்த கௌரவ பிரதமர், தலைமை தேரருக்கு சிறப்பு பரிசொன்றையும் வழங்கினார்.

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களும் மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு அஷ்ட பரிஷ்கார நிவேதனம் செய்தார்.

குறித்த நிகழ்வில் கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி அக்கமஹா பண்டித வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபையின் துணை பதிவாளர் கௌரவ அலுத்நுவர அனுருத்த தலைமை தேரர், பிரதி பதிவாளர் பேராசிரியர் நெலுவே சுமனவங்ஷ தலைமை தேரர், வெலிகம அக்ரபோதி ரஜமஹா விகாராதிபதி பேராசிரியர் மிதிகம சோரத தலைமை தேரர், உதவி பதிவாளர் ராஜகீய பண்டித தந்திரிமுல்லே சரண ஸ்திவிர தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.

 

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.