ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல – கோர்ட்டு தீர்ப்பு

மும்பை

மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில்  ஒருவரிடம் மற்றொருவர் ‘ஐ லவ் யூ’ என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவது தான் சட்டப்படி குற்றம். குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.