செம்பருத்தி தொடரில் புது வில்லி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் முன்னணி தொடராகவும், ரசிகர்களை கவர்ந்த தொடராகவும் வலம் வந்தது செம்பருத்தி. ஆனால், சமீப காலங்களில் அந்த தொடரின் கதைப்போக்கு சுவாரசியமாக இல்லை. ஏற்கனவே நந்தினி மற்றும் வனஜா என்ற இரண்டு வில்லி கதாபாத்திரங்கள் இந்த தொடரில் செய்யாத லீலைகள் இல்லை. தந்திரம் தொடங்கி மந்திரம் வரை அனைத்து வித்தைகளையும் இறக்கி பார்த்து விட்டனர்.

இந்நிலையில் கதையில் புது ட்ராக் கொண்டு வந்திருக்கும் படக்குழுவினர் கோலாலம்பூர் நீலாம்பரி என்ற புது டெரரான கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை ஷில்பா நடிக்கிறார். அவர் நடித்த காட்சியின் புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலாம்பரிக்கான ஓப்பனிங் சீனிலேயே, அவர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டு கொன்று விடுகிறார். படையப்பா நீலாம்பரி போல கெத்தாக நுழையும் இந்த கதாபாத்திரம் சீரியலிலுக்கு எந்த வகையில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.