புதிய இருபது ரூபாய் நோட்டுக்களால் ஆளுயர பண மாலையை அணிவித்து முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்! <!– புதிய இருபது ரூபாய் நோட்டுக்களால் ஆளுயர பண மாலையை அணிவித்… –>

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர், புதிய இருபது ரூபாய் நோட்டுக்களால் ஆன ஆளுயர பண மாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவித்து வாழ்த்து பெற்றார்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினரை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 133 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழுமலை என்பவர் முதலமைச்சரை சந்திக்க வரும்போது புதிய 20 ரூபாய் நோட்டுகளால் தொடுக்கப்பட்ட ஆளுயர பணமாலையை தயார் செய்து எடுத்து வந்திருந்தார்.

அதுபற்றி கூறிய அவர், தாம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்த மாலையை தயார் செய்து எடுத்து வந்ததாகவும், அதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் இருக்கும் எனவும் கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.