மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் – அரசாணை பிறப்பித்த தமிழக அரசு.!

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உலகில் அழிந்து வரும் உயிரனங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசியின் அந்த அரசாணை உத்தரவுப்படி,

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் திட்டத்திற்காக 5 கோடியை நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை ஒதுக்கியம்  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் அனுமதிக்காக கடற்பசு பாதுகாப்பிற்கான வரைவு அறிக்கையை வனத்துறை இடம் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.