மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

அதிமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை முந்தைய நாள் இரவு அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸார் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது அவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப் பதிவு அன்று ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.

அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின.

அதிமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த நரேஷ் என்ற அந்த நபர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் பிப்ரவரி 21 இரவு 8:30 மணிக்கு ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். இரவு 10:30 மணி வரை ஜெயகுமார் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இப்படியும் ஒரு தோல்வி.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்குக் கூட பெறாத வேட்பாளர்கள்!

ஜெயக்குமாரை அன்று நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தனர்.

மார்ச் 7ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (பிப். 23) ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மேலும் ஒரு வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக ஜெயக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, சட்டவிரோதமாக கூடுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.