வெடி விபத்தில் 59 பேர் பலி| Dinamalar

உகாடோவுகோ:புர்கினா பாசோவில், தங்க சுரங்கம் அருகே ரசாயன பொருட்கள் வெடித்த விபத்தில், 59 பேர் பலியாயினர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், பாம்ப்லோரா கிராமம் அருகே தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இதன் அருகே, தங்க சுத்திகரிப்புக்கான ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.இந்த ரசாயன பொருட்கள் நேற்று முன்தினம் திடீரென வெடித்து சிதறின.

இதில் அப்பகுதியில் இருந்த 59 பேர் பரிதாபமாக பலியாயினர். காயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.வெடிவிபத்தால் பலியானோர் உடல்கள், தங்க சுரங்கம் அருகே சிதறிக்கிடந்ததாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.