வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.