3 வாரங்களில் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் அதிகரிப்பு

கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு, வைரஸ் காய்ச்சல், டெங்குப் பரவல் ஆகியவற்றின் அதிகரிப்பு காரணமாக அதிகரிப்பு பரசிற்றமோலுக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கடந்த 3 வாரங்களில் நாட்டின் பரசிற்றமோலுக்கான கேள்வி 275 சதவீதத்தால் உயர்ந்திருப்பதாக தெரிவித்த அவர் ,பரசிற்றமோல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இறக்குமதி செய்யும் நிறுவனம் அவற்றை இறக்குமதி செய்ய பின்வாங்குவதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.