இந்தியர்களிடம் மோசடி நேபாளத்தினர், சீனர் கைது| Dinamalar

காத்மாண்டு:நேபாளத்தில், இந்தியர்களை குறிவைத்து, ‘ஆன்லைன்’ வாயிலாக கடன் தந்து மோசடிகளில் ஈடுபட்ட, சீன நாட்டினர் உட்பட 117 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், ஆன்லைன் வாயிலாக கடன் தருவதாக கூறி நடக்கும் மோசடி சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.கடந்த 21ம் தேதி, இந்த மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, தலைநகர் காத்மாண்டு மற்றும் பக்தாபூர் மாவட்டத்தில் உள்ள சில இடங்களில், போலீசார் சோதனை நடத்தி 117 பேரை கைது செய்தனர்.

அவர்களில் இரண்டு பேர் சீனாவை சேர்ந்தவர்கள்; மீதி 115 பேர், நேபாள இளைஞர்கள். அவர்கள் பயன்படுத்திய, 48 ‘லேப்டாப்’கள் மற்றும் 14 கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான சாங் ஹூ பாவோ என்ற சீன நாட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இந்தியர்களை குறிவைத்து, இந்த ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.