ஐரோப்பாவின் எதிர்காலத்திற்கு ஆபத்து; உக்ரைன் வெளியுறவு அமைச்சர்| Dinamalar

கீவ்: ரஷ்யா துவக்கிய தாக்குதல் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டுமெட்ரா குலேபா கூறியதாவது: உக்ரைன் தன்னை தற்காத்து கொண்டு, வெற்றி பெறுவோம். உக்ரைன் மீது புடின் முழு அளவிலான போரை துவக்கி உள்ளார். அமைதியாக இருந்த உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உலக நாடுகள் இதில் தலையிட்டு உடனடியாக புடினை தடுத்து நிறுத்த வேண்டும்.

latest tamil news

உலகம் உடனடியாக செயல்பட வேண்டும். பேரழிவு ஏற்படுத்தும் நடவடிக்கையை ரஷ்யா துவக்கி உள்ளது. தற்போது ரஷ்யா, அனைத்து வகையிலும் தனித்து விடப்பட்டுள்ளது. உலகம் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.