சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான பந்துல பத்மகுமார காலமானார். இவர் சிறுநீரக நோய் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இவர் சுமார் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறக்கும் பொழுது அவருக்கு 71 வயது. இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், தலைவராகவும் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘முல் பிடுவ’ என்ற பத்திரிகை கண்ணோட்டம் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.