நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெற்றி பெற்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஒரே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.