பீடி தரமறுத்ததால் ஆத்திரம் – தந்தையை கொன்ற மகன் கைது

கவுகாத்தி:
அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்மியா (50). அவரது மகன் சம்சுல் ஹோக் (30). 
நேற்று லால்மியா பீடி குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, சம்சுல் தனக்கும் பீடி வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டபோது அவரும் கொடுத்துள்ளார். சம்சுல் மீண்டும் ஒரு பீடி கேட்டதற்கு, அவரது தந்தை தர மறுத்துவிட்டார்.
ஆத்திரம் அடைந்த சம்சுல் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறவே, சம்சுல் கூர்மையான கத்தியால் தந்தை லால்மியாவைக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த லால்மியா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று குற்றவாளி சம்சுலை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.