புடின் தான் 21ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.. அவர் நிறுத்தாவிட்டால் 3வது உலகப் போர் வெடிக்கும்! உக்ரைன் எம்.பி எச்சரிக்கை


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்றும், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு அவர் நிறுத்தமாட்டார் என்றும் உக்ரைன் எம்.பி. எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எம்.பி Oleksii Goncharenko கூறியதாவது, புடின் தான் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர்.

21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் போர், கொலைகள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர், குண்டுவீச்சு, ராக்கெட் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. புடின் தற்போது நிறுத்தாவிட்டால், 3வது உலகப்போர் வெடிக்கும்.

புடின் உக்ரைனோடு நிறுத்தப்போவதில்லை. மேலும் முன்னோக்கி நகர்வார். பின் பால்டிக் நாடுகளாக இருக்கும், பின் போலாந்தாக இருக்கலாம்.

தற்போது உக்ரேனியர்கள் அவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் பாதுகாக்கிறார்கள்.

மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர், பலர் நாட்டின் மேற்கை நோக்கி நகர முயற்சித்து வருகின்றனர். அவர்களின் நகரங்கள், வீடுகளுக்காக போராட மக்கள் பலர் ஆயதங்களை பெற்று வருகின்றனர். அதுதான் இப்போது நிலைமை.

ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு முழுமையான தடை, அதேசமயம் உலக நிதி அமைப்பிலிருந்து ரஷ்யாவை துண்டிப்பது உட்பட சரியான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளுக்கு Goncharenko அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ரஷ்ய எண்ணெய் பீப்பாயிலும், ஒவ்வொரு கன மீட்டர் ரஷ்ய எரிவாயுவிலும், உக்ரேனிய இரத்தம் உள்ளது என Goncharenko தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.