பொன்முடி வழக்கு ஒத்திவைப்பு| Dinamalar

விழுப்புரம்,-அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.நேற்று, இவ்வழக்கு விசாரணை நீதிபதி பூர்ணிமா, முன்னிலையில் நடந்தது. விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சங்கீதா ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.