மும்பையில் காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததை கொண்டாடிய மக்கள்

மும்பை: மும்பை அருகே காணாமல் போன தெரு நாய் திரும்பி வந்ததையடுத்து, அதற்கு ஆரத்தி எடுத்து வரவேற்று கொண்டாடி உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

மும்பையின் தாதர் அருகே உள்ள நைகான் பகுதியில் விஸ்கி என்ற நாய் வசித்து வந்தது. அப்பகுதி பொதுமக்கள் விஸ்கிக்கு உணவுப்பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விஸ்கி காணாமல் போய் உள்ளது. இதையடுத்து, விஸ்கியை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் விஸ்கி காணாமல் போன தகவலை தெரிவித்து கண்டுபிடித்துத் தர உதவுமாறு கோரிக்கை வைத்தனர்.

ஒரு வார தேடலுக்குப் பிறகு தெற்கு மும்பையின் வில்சன் கல்லூரி அருகே இருந்த விஸ்கியை கண்டுபிடித்து நைகான் பகுதிக்கு ஒரு டாக்சியில் அழைத்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள், விஸ்கியை ஆரத்தி எடுத்தும் இனிப்புகளை வழங்கியும் மலர்களை தூவியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைப் பார்த்த ஏராளமானோர், தங்கள் பங்குக்கு லட்சக்கணக்கானோருக்கு பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் லைக் தெரிவித்து தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.