ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு?| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கூறப்படுவதாவது: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனையடுத்து உக்ரைன்மற்றும் அதனை சுற்றி உள்ள நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யா உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

latest tamil news

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று (பிப்.24) இரவு பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.