வடக்கு கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையில் நேற்று (23) நடைபெற்றது.

கல்வி அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தினை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

வடக்கு கல்விச் சமூகத்தினரால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.