#INDvSL || இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி., 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது

இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங் தேர்வு செய்தது..

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 32 பந்துகளில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 44 ரன்களை சேர்த்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் 56 பந்துகளில், 10 பவுண்டரி, 3 சிக்சருடன் எண்பத்தி ஒன்பது ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அதிரடி ஆட்டத்தால் 57 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக கை கொடுத்த ரவீந்திர ஜடேஜா 3 ரன்களை எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்துள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து, 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

அதிகபட்சமாக இலங்கை வீரர் சரித் அசலங்க 53 ரன்கள் எடுத்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.