இந்திய அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் , இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

மூன்று ரி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சென்றுள்ளது. 

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது  ரி 20 போட்டி லக்னோவில் நேற்று (24) ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டது.

இந்திய அணி சார்பில் முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா  32 பந்துகளில்  44 ஓட்டங்களும், இஷான் கிஷன்  56 பந்துகளில்  89 ஓட்டங்களும்,  எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 57 ஓட்டங்களை பெற, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்கள் மொத்தமாக பெற்றது.

இதையடுத்து 200 ஓட்டங்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதுன் நிஷாங்க சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். அணிக்கு அதிக ஓட்டங்களாக அசலங்க 53 ஓட்டங்களை பெற்றதை தவிர மற்ற வீரர்கள் குறைந்தளவிலான ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இறுதியில் இலங்கை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களை  பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.