இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 10ந்தேதி வரை சிறை!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் மார்ச் 10ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தர  22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மடக்கி கைது செய்து இலங்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மயிலிட்டி துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் 22 பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 22 தமிழக மீனவர்களையும் அடுத்த மாதம் (மார்ச்)  10ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறபித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.