உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பயணச் செலவை ஒன்றிய அரசே ஏற்கும் என தகவல்

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான விமான பயண செலவை ஒன்றிய அரசே ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை விமானம் மூலம் மீட்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.