உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

 அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 
கிவ்வில் இருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவம்  தெரிவித்தது.  ரஷிய படைகளின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தெருவெங்கும் சைரன்களை ஒலித்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இதுபற்றி கூறுகையில், “ அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம். உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.