காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..!

கானாமல் போன +2 மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தோமையார்புரத்தை சேர்ந்தவர் சர்குணம். இவரின் மகள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இருந்து வீடு தூரமாக உள்ளதால் அவரது மாமா வீட்டில் தங்கி பள்ளி சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர் ட்யூசன் முடிந்தும் வீடு திரும்பததால் அவரது மாமா அதிர்ச்சியடைந்தார். இதனால், அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது, மாணவி திருச்சி ரயில் தண்டவாளத்தில் மாணவி பிணமாக கிடந்தார். 

தகவறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழ்ககுபதிவு செய்த காவல்துறையினர் சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.