சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. அதிகாரிகள் விசாரணை..!

சத்துணவு சாப்பிட்டதால் பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம், அத்தியாநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று  மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முட்டை அழுயதால் பாதிப்பா அல்லது உணவால் பாதிப்பு ஏற்பட்டதா  என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.