ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள அம்சிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரர்கள் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் தந்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.