தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்… திருப்பத்தூர் அருகே சோகம்..!

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (80) . இவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு செல்ல ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சோதனை ஓட்டத்திற்காக சென்ற ரயில் அவர் மீது மோதியது.

 இந்த விபத்தில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவ குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.