‘திமிர் பிடித்தவள்… ஈகோயிஸ்ட்… யெஸ், நான் அப்படித்தான்!’ வெளியே வந்ததும் கர்ஜித்த வனிதா

Tamil Actress Vanitha Vijayakumar Update : தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது அவருக்கு ஜோடியாக சந்திரலோகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர், அதன்பிறகு சினிமாவை விட்டு விலகினார். இதனிடையே திருமணம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கிய இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற இருக்கு பிக்பாஸ் நிகழச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு இவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும் நிலையில், தற்போது பிரஷாந்துடன் அந்தகன் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட நிகழ்ச்சியில் போட்டியாளராக வனிதா விஜயகுமார் கலந்துகொண்டார். 24 மணி நேரமும் ஒடிடி தளத்தில் ஒளிரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே வனிதா சக போட்டியாளர்கள் அனைவருடனும் சண்டையிட்டுக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

இதனால் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்ற வனிதா நேற்று முன்தினம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். தனது மன ஆரோக்கிய பாதிப்பு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக குறிப்பிட்டுள்ள வனிதா, வெளியில் வந்தவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா விஜயகுமார், அந்த பதிவில், “என்னை திமிர்பிடித்த, அகங்காரமான நபர் எனநினைப்பவர்களும். ஆம் நான் அப்படித்தான். அதற்கு நான் தகுதியானவள் தான். அதை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது உங்கள் பிரச்சனை, அது என் பிரச்சனை இல்லை. எனக்கு நான் தான் முக்கியம்” என தெரிவித்து உள்ளார். 

தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த பதிவிற்கு தங்களது கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.