தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கு- ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை:
சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது. 
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். 
இது தொடர்பான புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
ஜெயக்குமாரின்  ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. 
கைது செய்யப்பட்டு சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.