பாதுகாப்புத் தளவாட உற்பத்தி – பிரதமர் பெருமிதம் <!– பாதுகாப்புத் தளவாட உற்பத்தி – பிரதமர் பெருமிதம் –>

பாஜக ஆட்சியில் ஏழாண்டுகளில் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கான 350 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் பற்றிய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியிலும், விடுதலைக்குப் பின்னரும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தில் இந்தியா வலிமையாகத் திகழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போர்க் காலத்திலும் ஆயுத உற்பத்தியில் பெரும் பங்காற்றியதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டில் 70 விழுக்காடு உள்நாட்டில் தளவாட உற்பத்தி, கொள்முதலுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா வலிமையுடன் திகழ்வதாகவும், அதைப் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் அளவுக்குப் பாதுகாப்பு உறுதிப்படும் என்றும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.