ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, பாபா சகோதரர்கள் அபார ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய தமிழக அணி 470 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது பபோட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய பாபா சகோதரர்கள் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் தன் பங்கிறகு 69 ரன்கள் எடுக்க தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 470 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சத்தீஷ்கர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சத்தீஷ்கர் அணி 5 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது. நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்பிரீத் சிங் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழக அணி இதுவரை 365 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.