#INDvSL || ஓவருக்கு 10 ரன்னை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி.! இரு அரைசதம்., சம்பவம் செய்த இளம் சிங்கங்கள்.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது

இன்று நடைபெறும் முதலாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 32 பந்துகளில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 44 ரன்களை சேர்த்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் 56 பந்துகளில், 10 பவுண்டரி, 3 சிக்சருடன் எண்பத்தி ஒன்பது ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அதிரடி ஆட்டத்தால் 57 ரன்களை சேர்த்தார். அவருக்கு துணையாக கை கொடுத்த ரவீந்திர ஜடேஜா 3 ரன்களை எடுத்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை சேர்த்துள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா,  இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி வீரர்கள் :

பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ஜனித் லியனகே, தசுன் ஷனகா, சமிக்கா கருணாரத்னே, ஜெஃப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, துஷ்மந்த சமீரா, லஹிரு குமார.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.