சம்மர் ஹாலிடே- மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

கொரோனா பெரும்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக டில்லி தொடங்கி தமிழகம் வரை பெரும்பாலான மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி முடிய பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர்.

கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த நேரடி வகுப்புகள் பிப்ரவரியில் மீண்டும் தொடங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் 9 -12 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை நடத்த மாநில பள்ளிக் கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு மார்ச் 21 ஆம் தேதி தேர்வுகளை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு செம செக் – ஏப். 1 முதல் நேரடி வகுப்புகள்!

இதேபோன்று 1- 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தவும், ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 10 முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு
கோடை விடுமுறை
அளிக்கப்பட உள்ளதாகவும் பள்ளி்க் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் 2021 -22 கல்வி ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. . கடந்த இரண்டு ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடைபெறாததால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்ய இந்த ஆண்டு முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.