"சர்" என்று பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. அடுக்குமாடிக் குடியிருப்பு காலி.. பதட்டத்தில் கீவ்!

கீவ் நகரில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று அடுக்கு மாடிக் குடியிருப்பில் தாக்கியதில் அந்தக் கட்டடத்தின் பல தளங்கள் சேதமடைந்தன.

உக்ரைன்
நாட்டு நேரப்படி இன்று காலை கீழ் நகரின் தென் மேற்குப் பகுதியில் 2 ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. எதைக் குறி வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஏவுகணை அடுக்கு மாடிக் குடியிருப்பில் வந்து அந்த கட்டடத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்தக் குடியிருப்புக்குப் பின்னால் ஒரு மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

இன்னொரு ஏவுகணையானது, ஜுலியானி விமான நிலையம் அருகே வந்து விழுந்தது. விமான நிலையத்தைக் குறி வைத்து அது ஏவப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதல் நாள் இரவுதான் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்து முடிந்த நிலையில் இன்று காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

யாரு இவரா காமெடியன்?.. சூப்பர் “ஹீரோ”வாக மாறிய உக்ரைன் அதிபர்!

ரஷ்யப் படைகள், உக்ரைன் தலைநகரை வளைத்து நிற்கின்றன. தலைநகரை கைப்பற்றி விட்டால் மொத்த உக்ரைனையும் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும் என்று ரஷ்யா திட்டமிட்டுள்ளது. மேலும் தலைநகரிலேயே அதிபரும் தங்கியிருப்பதால் அவரது நிலை என்னாகும் என்றும் தெரியவில்லை.

ஒரு வேளை கீவ் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டால், அதிபர் சிறை பிடிக்கப்படுவார் அல்லது ஐ.நா.விடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கீவ் நகருக்குள்ளும் கூட ரஷ்யப் படையினர் ஊடுறுவி விட்டனர். ஆங்காங்கே தெருக்களில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையே சண்டையும் நடந்து வருகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.