சிறப்பு விமானத்தில் வரவிருக்கும் 5 தமிழர்கள் உள்பட 470 இந்தியர்கள்

புதுடெல்லி:
உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்களை உடனடியாக தாய்நாடு அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக, ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ருமேனியா வந்த இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் மும்பைக்கு அழைத்து வரப்படுகின்றனர். 
மும்பைக்கு அழைத்து வரப்படும் இந்தியர்களில் 5 பேர் தமிழர்கள். ஏர் இந்தியா விமானம் மூலம் 470 பேர் அழைத்து வரப்படுகின்றனர்
என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.