தலைநகர் கீவ், மற்றும் சுற்றுப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது – உக்ரைன் அதிபர் <!– தலைநகர் கீவ், மற்றும் சுற்றுப் பகுதிகள் அரசின் கட்டுப்பாட… –>

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யப் படைகள் சூழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நகரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், தங்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாட்டை பாதுகாக்க முன்வருமாறு உக்ரைன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, போரிட துணிந்து வருபவர்கள் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரஷ்ய படைகளை தங்களது ராணுவம் நிலைகுலைய வைத்துள்ளதாகவும், அவர்களின் அனைத்துவிதமான போர் திட்டங்களையும் முறியடித்துள்ளதாகவும் செலன்ஸ்கி கூறினார்.

தாங்கள் அமைதியாகவே வாழவே விரும்புவதாக குறிப்பிட்ட அவர், போரை நிறுத்துவதற்கு ரஷ்ய மக்கள் தங்கள் அதிபர் புதினுக்கு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.